தீபாவளி வாழ்த்துக்கள்

'பேசும் தமிழ்' வாசகர்களுக்கு எம் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீபாவளி என்றதும் நினைவுக்கு வருவது பட்டாசு தான். புது ஆடைகள் உடுத்துவது, எண்ணெய் தேய்த்து குளிப்பது, பெரியோர்களிடம் ஆசி பெறுவது என்று தீபாவளி பண்டிகையின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் நம்மிடம் இன்றும் இருப்பது என்னவோ ஆச்சரிய பட வேண்டிய விஷயம் தான். கலாச்சாரம் மாறி வருகின்ற காலகட்டத்தில் எதுவுமே அதிசயமாகவே உள்ளது.

முன்பெல்லாம் தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பாகவே எங்கும் களைகட்ட ஆரம்பித்து விடும். கடை வீதிகளில் கூட்டம் அலை மோதும். இன்றும் அது காணப்பட்டாலும், அன்றை காட்டிலும் குறைவே. விலை வாசி உயர்வு ஒரு காரணம் என்றாலும், அந்நிய மோகம் மற்றும் மத மாற்றம் சில காரணங்களாகவே கருதப்படுகிறது.தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லும் இந்த நேரத்தில், மத மாற்றம் செய்யும் அந்நிய சக்திகளை ஒடுக்குவோம் என்று உறுதி கொள்ள வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்.

'இந்து' என்பது மதம் அல்ல
'இந்துத்துவம்' என்ற பெயரில் ஆறு வகையான வழிபாட்டு முறைகளை உள்ளடக்கி ஒரு பேரியக்கமாக இருந்து வந்த பண்டைய பாரம்பரியமானது, சில பல அந்நிய மத சக்திகளால் சூறையாடப்பட்டு, இன்று இந்து மக்களாலேயே மதவாதமாக பார்க்க படுகிறது. யானை தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டு கொள்ளுமாம். அது போலவே இந்து மதமானது நம் அரசியல்வாதிகளாலேயே கீழே தள்ள படுகிறது.

இந்துக்களே, இந்து மதத்தை தெரிந்து கொள்ளுங்கள்.


  • நாம் என்றும் எப்போதும் பிற நாடுகளை ஆக்கிரமித்ததில்லை.

  • மதத்தின் பெயரால் மற்றவர்களை புண்படுத்தியது இல்லை.

  • மத மாற்றம் என்ற செயலை செய்ததில்லை

  • எங்கும் எதிலும் கடவுளை பார்க்கும் உன்னதமான இயக்கத்தை சார்ந்தவர்கள் நாம்

  • இன்று வரை இந்து மதம் தோன்றிய நாடக இருந்தாலும் நேபாளம் மட்டுமே முழு இந்து நாடக இருக்கிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த மதத்தை சார்ந்தவர்கள் நாம். நமக்கு குடிப்பதற்கு பால் அளிக்கும் மாட்டை கூட மதித்து பண்டிகை கொண்டாடுபவர்கள் நாம். நாகரிகத்தை இந்த உலகுக்கு கற்பித்து நாமே.

'இந்து' என்று சொல்வதில் பெருமை கொள்ளுங்கள். தீபங்களின் பண்டிகை தீபாவளி நம் யாவரின் வாழ்விலும் விளக்கேற்றும்.

1 கருத்துக்கள்:

Unknown November 29, 2008 at 7:04 PM

all the articles which u have put v fine and heart touching. I agree except the point of conversation. It is happings since we started worshiping the FORCE. In particular tamilian first worshiped the natural focrces i.e, the puncha pootha. Then converted to Buddism / Jainism and then to Hiduism during 6th centuary forcefully by Thirunansambandar