கருணாநிதியால் திருவள்ளவருக்கு வந்த சோதனை

தமிழ் புத்தாண்டு இத்தனை நூற்றாண்டுகளாக சித்திரை மாதம் தான் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக தமிழ் பாரம்பரியத்தை கட்டி காப்பதாக தானே பறையும் கருணாநிதி, தை மாதம் தமிழ் புத்தாண்டு என்று மாற்றி தானும் தன்னை சார்ந்தவர்களையும் கொண்டாட சொல்லி வற்புறுத்தி வருகிறார். கடந்த 2011 தேர்தலில் குடும்ப ஈடுபாடு காரணமாய் கோட்டையை விட்டு விட்டு கோபாலபுரத்திலும், ஆழ்வார்பேட்டையிலும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். தன் குடும்ப உறுப்பினர்களை காத்தது போக மீதி நேரத்தில் கொஞ்சம் தமிழையும் காக்கிறார்.
திருவள்ளுவர் என்ன பாவம் செய்தார்? அவரை கேவலப்படுத்துவதற்கு ஒரு அளவு இல்லையா? திருவள்ளுவரை கருணாநிதி என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளாரா? இந்த சுவரொட்டியை பார்த்தால் அதன் அர்த்தம் உங்களுக்கு புரியும்.

அந்த சுவரொட்டியில் "தமிழ் சமுதாயமே எதிர்பார்க்கப்பட்ட தலைவர் கலைஞர் அவர்களால் உறுதி செய்யப்ப்பட்ட தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு" என்று இருக்கிறது.

தமிழ் மேல் ஆர்வம் கொண்ட எவருக்கும் இதை பார்த்தால் வருவது கோபமா? எரிச்சலா? இல்லை, ஆட்சியை இழந்து வேறு வழியில்லாமல் இது போல் தமிழ் மக்களை எள்ளி நகையாடும் இவர்களை கண்டு பச்சாதாபமா?

தமிழர்களே, நீங்களே முடிவு செய்யுங்கள்.


 

0 கருத்துக்கள்: